லாலுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை...உடல்நிலை எப்படி உள்ளது!!!

லாலுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை...உடல்நிலை எப்படி உள்ளது!!!

சிங்கப்பூரில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.  இந்தத் தகவலை தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அறுவை சிகிச்சை:

முன்னாள் ரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் லாலுவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.  சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை அடுத்து அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மகள் தந்தைக்கு சிறுநீரகம் தானம் செய்துள்ளார்.

தொண்டர்களின் பிரார்த்தனைகள்:

லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ரோகினிக்கு ஆசி வழங்கியுள்ளனர். காலையில் எழுந்தது முதல் அனைத்து தலைவர்கள் உட்பட அனைத்து ஆர்ஜேடி ஆதரவாளர்கள் மற்றும் லாலு பிரசாத்தின் தொண்டர்களும் அறுவை சிகிச்சை நேரத்தில் முழு நேரமாக பிரார்த்தனையில் ஈடுப்பட்டிருந்தனர் என பீகார் மாநில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்...நிதியுதவி செய்த அமெரிக்கா...உண்மையில் நடந்தது என்ன?!!