நாடு முழுவதும் அதிகரித்த சிறுவர்கள் தற்கொலை... நாளொன்றுக்கு சராசரியாக 31 பேர் தற்கொலை...

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,396 சிறுவர்கள் தற்கொலை - சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 பேர் தற்கொலை

நாடு முழுவதும் அதிகரித்த சிறுவர்கள் தற்கொலை... நாளொன்றுக்கு சராசரியாக 31 பேர் தற்கொலை...

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 396 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இவர்களில் 5 ஆயிரத்து 392 பேர் ஆண்கள் என்றும், 6 ஆயிரத்து 4 பேர் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.  

சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 பேர் வீதமும், ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் வீதமும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதமும், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதமும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.