டெல்லியில் கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...

டெல்லியில் காற்று மாசு காரணமாக கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...

 டெல்லியில் காற்று மாசு அதிகரித்து மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கற்றின் மாசு அளவை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதில் ஒரு பகுதியாக டெல்லியில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் தவிர மற்ற வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

பெருநிறுவனங்கள் இயங்கவும், கட்டுமான பணிகள் நடைபெறவும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆனால் காற்றின் மாசு அளவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை வரும் 26 ஆம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதேநேரம் கட்டுமான பணிகளுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.