யஷ்வந்த் சின்ஹா-விற்கு ஆதரவளிக்கும் ஆம் ஆத்மீ கட்சி..!

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவளிப்பதாக ஆம் ஆத்மீ கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா-விற்கு ஆதரவளிக்கும் ஆம் ஆத்மீ கட்சி..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள்( ஜூலை 18) குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர்  திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மீ கட்சி, தற்போது தனது ஆதரவை எதிர்க்கட்சி வேட்பாளரான யஸ்வந்த் சின்ஹாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மீ கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், " எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கும். நாங்கள் திரௌபதி முர்முவை மதிக்கிறோம் ஆனால் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்போம்" என கூறியுள்ளார்.