பொன்னியின் செல்வன்2...! இணையதளங்களில் வெளியிட தடை...!!

பொன்னியின் செல்வன்2...! இணையதளங்களில் வெளியிட தடை...!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்று உலகெங்கிலும்  வெளியாகி உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில்  வெளியிடுவதை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ். சௌந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளதாகவும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.