திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் , திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை திரிஷா. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றவர் என்றே கூறலாம்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம், மலையாளம் போன்ற திரையுலகிலும் முன்னனி நடிகையாக வலம் வந்த திரிஷா சமீக காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்தார். இது தவிர இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

மேற்கொண்டு எந்த புதுப் படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் தான் புது படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையில் நான் எனக்கானவரை சந்திக்கும் வரையில்  வாழ்நாள் முழுக்க சிங்கிளாக இருப்பேன் “என கூறியிருந்தார்.

இந்நிலையில் திரிஷா தனக்கான நபரை கண்டுபிடித்துவிட்டாரா , அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.