தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் - BK கண்மணி போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி!!

தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் - BK கண்மணி போட்ட இன்ஸ்டாகிராம்  ஸ்டோரி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அது என்ன ஒரு காலத்தில் என்று தான நினைக்கிறீர்கள்.. சீரியலில் முதலில் இருந்து நடித்து வந்த முக்கிய நடிகர்கள் ஒவொவொருவராக விலகி வருகிறார்கள்.. ஆனால் ஏன் என்று எந்த தகவலும் இல்லை.

அந்த வகையில், பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து முதல் ஆளாக வெளியேறி பிள்ளையார் சுழி போட்டது அகிலன் வேடத்தில் நடித்தவர் தான்.. அவருக்கு பட வாய்ப்புக்கள் அதிகம் வருவதன் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடிக்கிறார். இவரை தொடர்ந்து, வீட்டு இல்லத்தரசிகள் மனதை கவர்ந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி வெளியேறினார். ஆனால், இவர் வெளியேறிய காரணம் குறித்து தெரியவில்லை..

அடுத்ததாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழில் அமுதா என்று தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.  இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தப்பான ஆட்களுக்காக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் என்ற ஒரு வாக்கியத்தை தொடர்ந்து பாரதி கண்ணம்மா நீ என்று தொடங்கும் பாடலை பின்னணியில் சேர்த்துள்ளார்.

இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் பெரும் அளவில் குழம்பி வருகிறார்கள். ஏன் இவர் இந்த மாதிரி ஒரு பதிவை போட்டிருக்கிறார். என்ன பிரச்சனை இவருக்கு.. கவலை படாதீர்கள் ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.