நயந்தாராவுடன் இருக்கும் அழகான உறவை...புகைப்படம் மூலம் உணர்த்திய நடிகை சமந்தா!! வைரலான பதிவு

நயந்தாராவுடன் இருக்கும் அழகான உறவை...புகைப்படம் மூலம் உணர்த்திய நடிகை சமந்தா!! வைரலான பதிவு

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா, அவ்வப்போது சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதில் அவர் பதிவிடும் புகைப்படங்களும் சரி,  வீடியோக்களும் சரி ரசிகர்களிடையே வேறலெவல்ல   வைரலாகும். ஆனால் அவர் தற்போது பதிவிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

அட என்ன போட்டோன்னு பாக்குறீங்களா..? இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நயந்தாராவுடன்  “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் நடிகை சமந்தா. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயந்தாராவும், சமந்தாவும் நெருங்கிய நண்பர்களாவே மாறிவிட்டனர்.

இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்ட நயன்தாராவும் சமந்தாவும் படு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றது. அந்த வகையில் சிறப்பு நாளான நேற்று 22.02.2022 தோழி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் சிறப்பான நாளில் எங்களுடைய சிறப்பான நட்பை வெளிப்படுத்தும் புகைப்படம்... நயந்தாரா இணையதளபக்கத்தில் இல்லை என்றாலும்...அவர் தனது அன்பை உங்களுக்கு அனுப்புகிறார் என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். நயந்தாராவுடனான நட்பை மிகவும் அழகாக வெளிப்படுத்திருக்கும் நடிகை சமந்தாவின் பதிவு நம்மையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.