பணியின் போது மரணித்த புதுச்சேரி போலீஸாருக்கு வீரவணக்க நிகழ்வு!

பணியின் போது மரணித்த புதுச்சேரி போலீஸாருக்கு வீரவணக்க நிகழ்வு!

புதுச்சேரியில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்கள். 

மரணித்தவர்களுக்கு மரியாதை

புதுச்சேரி காவல்துறை சார்பில், கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பிறமாநிலங்களில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க : ஆளுநர் தனது பொறுப்பறிந்து செயல்பட வேண்டும்-அன்பழகன்!

அமைச்சர் - அதிகாரிகள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏடிஜிபி அனந்தமோகன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் காவலர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர்கள் 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.