விடுமுறை நாளில் வெறிச்சோடி காணப்பட்ட உதகை ரோஜா பூங்கா...

உதகை ரோஜா பூங்காவில் வார விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.

விடுமுறை நாளில் வெறிச்சோடி காணப்பட்ட உதகை ரோஜா பூங்கா...

நீலிகிரி | சுற்றுலா நகரமான  உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையான இன்று உதகை ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

குறிப்பாக உதகை நூற்றாண்டு ரோஜா பூங்கா சுற்றுலாப் பயணிகள் குறைவாக காணப்படுகிறது.

மேலும் படிக்க | டீ பிரியர்களின் கவனத்திற்கு... டீ யில் இவ்வளவு வகை இருக்குங்க ?