கூவம் ஆற்றில் மூழ்கிய சிறுவன்...! தேடும் பணி தீவிரம்....!

கூவம் ஆற்றில் மூழ்கிய சிறுவன்...!  தேடும் பணி தீவிரம்....!

சென்னை : நேற்று மாலை கூவம் ஆற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் தீயணைப்பு துறையினர்.

சென்னை சைதாப்பேட்டை ஒட்டியுள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவரின் மகன் சாமுவேல்(14). இவர் சைதாப்பேட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி முடித்துவிட்டு அருகில் இருந்த கூவம் ஆற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாமுவேல் மட்டும் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ந்து போன நண்பர்கள் அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நந்தனம் தீயணைப்புத் துறையினர், முதலில் சிறுவனை தேட ஆரம்பித்தனர். மேலும் சைதாப்பேட்டை, அசோக் நகர், மேடவாக்கம், கிண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  இருந்து விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிறுவனை நேற்று மாலையில் இருந்து தற்போது வரை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 ரப்பர் படகுகளைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இப்பகுதி மீனவர்கள் இரண்டு பேரும் கூவம் ஆற்றில் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 
இதையும் படிக்க : உ.பி : பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து...! 3 பேர் பலியான சோகம்...