பந்தயத்தில் புறா... குவியும் பாராட்டுகள்..!!

பந்தயத்தில் புறா... குவியும் பாராட்டுகள்..!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 1700 கிலோ மீட்டர் வான்வழி தூரம்  பறந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த அறந்தாங்கியைச் சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற ரோமர் வகை புறாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக்.  இவர் பள்ளிவாசலில் பள்ளி இமாமாக உள்ளார்.  இவர் தனது 12வயது முதல் புறா வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு முதல் இந்திய நாட்டில் புறா பந்தயமானது துவங்கி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. 

புறா வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட சாதிக் தான் வளர்க்கும் புறாவையும் பந்தயத்தில் விட வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு  பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.  புறாக்களை அடைக்கும் கூண்டிற்கு பரண் பறை என்று பெயர் வைத்து புறாக்களை வளர்த்து வருகிறார்.  

அதில் ரோமர் வகையைச் சேர்ந்த பெண் புறா ஒன்றுக்கு  சுரையா தியாப்ஜி என்று பெயரை சூட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்த்து வரும் சாதிக் கடந்த 2022 ஆண்டு சுரையா தியாப்ஜி என்ற அந்தப் புறாவை முதல் முறையாக 550 கி.மீ. பறக்கவிட்டு 10வது இடத்திலும் 1000 கி.மீ. தூரம் வரை பறந்த சாதனையும் பெற்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து ( 2023) இந்த ஆண்டு 350 கி.மீ. தூரம் பந்தயத்தில் முதலிடத்தையும், 800 கி.மீ. தூர பந்தயத்தில் 7ம் இடத்தையும் தமிழ்நாடு புறா பந்தைய சம்மேளனம் சார்பில் நடந்த 1700 கிலோமீட்டர் தூர ஓபன் பந்தயத்தில் 5வது இடத்தையும், 1700 கி.மீ டெல்டா ஒபன் அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. 

இதுவரை நடந்த  புறா பந்தயங்களில் தேசிய அளவில் 4ஆம் இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.  இதனை அறிந்த   நண்பர்கள் உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் விட்டு மாநிலம் பல ஆயிரம் கி.மீ தூரம் சென்று புறாக்களை பந்தயத்திற்கு விடும் புற உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற பந்தைய புறா வளர்க்கும் உரிமையாளர்களுக்கு முறையான அரசு அங்கீகாரமும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பந்தய புறா உரிமையாளர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிக்க:  ஐ எம் ஆல் சோ டாக்டர்... பெண் மருத்துவரை காலணியால் தாக்கிய இளைஞர்!!