அரியவகை ஆந்தையை பத்திரமாக மீட்ட அதிகாரிகள்...

வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரியவகை ஆந்தையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

அரியவகை ஆந்தையை  பத்திரமாக மீட்ட அதிகாரிகள்...

திண்டுக்கல் | ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அரியவகை ஆந்தை ஒன்று இருப்பதாக அலுவலர்கள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரியவகை ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

மேலும் படிக்க | சித்தாப்பாவின் கல்யாணத்துக்கு 7 தலைமுறை உறவுகளின் போட்டோக்களை சாட் போட்டு பரிசளித்த மகள்! ஆச்சரியத்தில் உறவுகள்