கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்...!!!

கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்...!!!

காரைக்கால் தனியார் துறைமுகம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தை பத்திரமாக மீட்டு பட்டினச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் விட்டுள்ளனர். 

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகம் அருகே கடலில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.  காற்றின் வேகத்தின் காரணமாக திமிங்கலம் கரை நோக்கி வந்திருக்கலாம் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 25 டன் எடையும் 60 அடி நீளமும் கொண்ட திமிங்கலம் உயிருடன் இருப்பதால் திமிங்கிலத்தை  பத்திரமாக மீட்டு நடுக்கடலில் விடும் முயற்சியில் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தர்கள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டனர். 

மீனர்கள் தங்களது சொந்த படகுகளின் மூலம் இழுத்துச் சென்று நடுக்கடலில் விட முயற்சித்தனர்.  திமிங்கலத்தை கயிறுகளால் கட்டி படகுகள் மூலம் இழுத்துச் சென்று பத்திரமாக நடுக்கடலில் பட்டினச்சேரி மீனவர்கள் விட்டு வந்தனர்.  திமிங்கலத்தை பாதுகாப்பாக நடுக்கடலில் விட்டு வந்த பட்டினச்சேரி மீனவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  மாணவ - மாணவிகளின் அழகோவிய கண்காட்சிக்கு மிகுந்த வரவேற்பு....!!!