மருத்துவரின் காரில் புகுந்த விஷ பாம்பு...! போராடி பிடித்த தீயணைப்புத்துறையினர்...!

மருத்துவரின் காரில் புகுந்த விஷ பாம்பு...! போராடி பிடித்த தீயணைப்புத்துறையினர்...!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் நவீன். இவர் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாததால் அவரது காரை கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் இன்று தனது காரை நிறுத்தி விட்டு மருத்துவ பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்து தனது காரை எடுக்க முயன்ற போது காரில் இருந்த விஷப்பாம்பை கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்  உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இது குறித்த தகவல் அறிந்து  குமரேசன் தலைமையிலான கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர், சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் இருந்த மூன்று அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் விஷப்பாம்பை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பிடித்து வனப்பகுதியில் விட்டனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.