270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ்..

270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ்..

மாண்டஸ் புயல்

கடந்த 5-ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அக்காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, பின்னர் புயலாக வலுவடைந்தது. அப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு அருகில்

சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்குமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் மிக மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க: மாண்டஸ் புயல் எதிரொலி.. மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து..!

விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.