வட்டி கேட்ட மூதாட்டியை, தீர்த்து கட்டிய தம்பதி!

வட்டி கேட்ட மூதாட்டியை, தீர்த்து கட்டிய தம்பதி!

மதுரை அருகே, வட்டிக்கும் பணம் விடும் மூதாட்டியை, கணவன், மனைவி தம்பதி, கொலை செய்ததை காவல்துறையினர் கண்டுபுடித்துள்ளனர். 

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே காலாங்கரை பகுதியில், கடந்த மாதம் 12-ம் தேதியன்று கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இதைக் கேள்விப்பட்ட நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணையில் இறங்கியபோது, இறந்து போனவர் கீழத்தோப்பு பகுதியைச் ராஜாமணி என்பது தெரியவந்தது. 

60 வயதான ராஜாமணி ஊருக்குள் வட்டிக்கு பணம் கொடுத்து வரும் வேலையை செய்து வந்த நிலையில், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

அதன்படி மூதாட்டியிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலை ரகசியமாக சேகரித்து வந்த போலீசாருக்கு திருநகரைச் சேர்ந்த வசந்தி என்பவர் மீது சந்தேகப் ஏற்பட்டது. 

உடனே திருநருக்கு விரைந்த காவல்துறையினர் வசந்தியையும் அவரது குடும்பத்தாரையும் விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

திருநகரில் வசித்து வந்த சத்தியமூர்த்தி என்பவரது மனைவி வசந்தி, குடும்பத் தேவைக்காக ராஜாமணியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் வாங்கிய கடன் வரம்பு மீறி சென்றதால் பெரும் தொகையில் முடிந்துள்ளது.  

இதையடுத்து கொடுத்த பணத்தை வசூலிக்க சென்ற ராஜாமணி, வசந்தியையும், அவரது கணவர் சத்தியமூர்த்தியையும் மானாவாரியாக திட்டித் தீர்த்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த தம்பதி, ராஜாமணியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 12-ம் தேதியன்று ராஜாமணியை காலாங்கரைப் பகுதிக்கு வரவழைத்து சத்யமூர்த்தி, கட்டையால் அடித்துக் கொலை செய்து ஆட்டோவில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

அதோடு ராஜாமணி அணிந்திருந்த 28 பவுன் நகைகளையும் திருடிய தம்பதி, மூதாட்டியின் பிணத்தை சாலையோரம் வீசி விட்டு வீடு வீசியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தை ரகசியமாக விசாரணை செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், சத்தியமூர்த்தி, வசந்தி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் வீரபெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க: திமுக பொதுக்கூட்டம், பக்திகூட்டம் ஆன கதை!