இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை.... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வடிவழகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை.... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் வடிவழகன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வடிவழகன் முத்தையப்பன் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த வடிவழகன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், சுரேஷ், காரமணி வினோத் உள்பட 7 பேர் முன்பகை காரணமாக இந்த கொலையைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை  வழக்கில் விநாயக மூர்த்தி,  வினோத் குமார், ரஜினி,  அருள் முருகன் ஆகிய 4 பேர் இன்று அதிகாலை காவல் துறையினர் கைது செய்த நிலையில் சாய்நாத்,  நிர்மல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்னர்.  

மேலும் தலைமறைவாக உள்ள சந்துரு என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வடிவழகன் ஓட ஓட விரட்டி 7 பேர் கொண்ட கும்பல் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.