கார் மீது மோதிவிட்டு உரிமையாளரை சரமாரியாக தாக்கிய லாரி ஓட்டுநர்..!

கார் மீது மோதிவிட்டு உரிமையாளரை சரமாரியாக தாக்கிய லாரி ஓட்டுநர்..!

சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடுரோட்டில் லாரி ஓட்டுநர் ஒருவர் தம்பதியினரை சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. 

பல்லாவரம் ரேடியல் சாலையில் அதி வேகமாக வந்த லாரி ஒன்று, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் சேதமானதை அடுத்து, அதன் உரிமையாளர் லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ஆவேசம் அடைந்த லாரி ஓட்டுநர், கார் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார்.  

அப்போது,  அக்கப்பத்தினர் தடுத்து நிறுத்தியபோது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய இருவரை பல்லாவரம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க  | ”எம்ஜியாருக்கு பிறகு வந்த நடிகர்கள் யாரும் அரசியலில் ஜொலிக்கவில்லை” - சீமான்