முன்னாள் பாஜக எம்.எல்.ஏ- துப்பாகி முனையில் மிரட்டல்!!

ம்ுன்னாள் பாஜக எம்.எல்.ஏ ஒருவரை, அவரது கார் கண்ணாடி உடைத்து துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியதாக புகர் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ- துப்பாகி முனையில் மிரட்டல்!!

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம். எல்.ஏ-வான அம்ரிதா மேக்வால்-லை, 4-5 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். தனது காரில், கடந்த ஞாயிற்று கிழமை இரவி அஜ்மீர் முதல் ஜாலோர் சென்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவர் 2013-18இல், ஜலோர் பகுதியின், பாஜக எம். எல்.ஏ வாக பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேலி பிலியா பகுதியில், தனது SUV-யில் பயணம் செய்து கொண்டிருந்த போது, மெக்வாலின் கார் கண்ணாடிகளை உடைத்து, மர்ம நபர்கள் துப்பாக்கி வைத்து அவரை மிரட்டியதாக, அஜ்மீர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரான விகாஸ் சங்வான் தெரிவித்தார். மேலும், கார் கண்ணாடிகளை உடைத்த நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, நிலைய அதிகாரி முகமது சுபேர் கூறினார்.

மேலும் படிக்க: நடக்கும் அநியாயங்களைப் பார்க்க முடியாமல் ராஜினாமா செய்ய முடிவெடுத்த எம். எல்.ஏ!

இதற்கிடையில், உதய்பூரில், திங்கள்கிழமை காலை ஒரு இளைஞனின் உடல் மீட்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நகரின் வல்லப்கர் பகுதியில் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட SDRF, முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை டலோரி அணைக்கட் அருகே, புதர்களுக்குள் சிக்கி சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஆற்றில் உள்ள கல்வெட்டைக் கடக்க முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். மேலும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவருடன் மோட்டார் சைக்கிளும் அடித்து செல்லப்பட்டுள்ளது. உதய்சாகர் ஏரியில் இருந்து வல்லபநகர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது, காலை 9 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.