நகைக்கடை உரிமையாளரை கடத்த முயற்சி.. பலே பிளான் போட்ட 7 பேர்.. தனிப்படைக்கு போலீசார் வலைவீச்சு!!

சென்னையை அடுத்த புழலில் தனிப்படைக் காவலர்கள் என்று கூறி நகைக்கடை உரிமையாளரை கடத்த முயன்ற 7 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நகைக்கடை உரிமையாளரை கடத்த முயற்சி..  பலே பிளான் போட்ட 7 பேர்..   தனிப்படைக்கு போலீசார் வலைவீச்சு!!

முகப்பேரைச் சேர்ந்த ராபின் ஆரோன் என்பவர் திருப்பதியில் புதிய கிளையை திறந்து வைத்து விட்டு காரில் சென்னை திரும்பியுள்ளார்.

இரவு 10 மணியளவில்  புழல் காவல் நிலையம் அருகே 3 இரு சக்கர வாகனங்களில் வந்து வழிமறித்த  7 பேர், தனிப்படை போலீசார் என்று  கூறி ராபின் ஆரோனை காரிலிருந்து இறக்கியுள்ளனர். பின்னர் 4 பேர் காரை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி அவரை மற்றவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் அனுப்பியுள்ளனர். ஆனால், கைரேகை மூலம்தான் காரை இயக்க முடியும் என்பதால் மீண்டும் புழலுக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த போக்குவரத்துக் காவலரிடம் ஆரோன் முறையிட்டுள்ளார். சந்தேகம் அடைந்த காவலர், இரு தரப்பையும் காவல்நிலையம் அழைத்ததையடுத்து 7 ஆசாமிகளும் இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில், போலி தனிப்படை என்பது தெரிய வந்ததையடுத்து 7 பேரையும்  தேடி வருகின்றனர்.