200 கோடி தடுப்பூசி இலக்கை தாண்டியதற்கு வாழ்த்து - பிரதமர் மோடி

200 கோடி தடுப்பூசி இலக்கை தாண்டியதற்கு வாழ்த்து - பிரதமர் மோடி

இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை தொடங்கிய மத்திய அரசு, இன்று 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து டுவிட்டர் பதிவிட்ட பிரதமர் மோடி , இந்தியா 200 கோடி தடுப்பூசி இலக்கை அடைந்து வரலாறு படைத்திருப்பதாகவும், கொரோனாவிற்கு எதிரான சர்வதேச போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாகவும் வாழ்த்தியுள்ளார்.   மேலும் இந்த சாதனைக்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரையும் பாராட்டியுள்ளார்.