ஆங் சான் சூகியிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை!

ஆங் சான் சூகியிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை!

மியான்மர் நாட்டின் சனநாயகத்திற்கான தேசியக் கழகம் எனும் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆங் சாங் சூகியிக்கு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது. அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.