கைது செய்யபட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

கைது செய்யபட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

கடந்த காலங்களில் கைது செய்யபட்டுள்ள அரசுக்கெதிரான போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு நுகேகொடை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள போராட்டக்கள உறுப்பினர்களை விடுவிக்கக் கோரி நேற்று இந்த இரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

சுடர் ஏற்றி பல்வேறு பாடல்களை இசைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி ஒலிபெருக்கியை பயன்படுத்தியதால் இந்த போராட்டத்தினை  இடைமறித்துள்ளனர். இதனால் காவல்த்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.