இந்தியாவுடன் அமைதியை தான் விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவுடன் அமைதியை தான் விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்காவின் ஹார்வட் பல்கலைக்கழக தூதுக்குழு மாணவர்களிடம் கலந்துரையாடிய பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப், இந்தியா பாகிஸ்தான் உறவு, பாகிஸ்தானின் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பேச்சுவார்த்தை மூலம் நாடுவதாகவும், இரு நாடுகளும் போர் புரிவதில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவையில் தீர்வு காண முற்படுவதாக தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தபோது, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிக்கல் மேலும் அதிகரித்தது. அப்போது இந்திய தூதுவரை வெளியேற்றி தனது எதிர்ப்பினை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவிழந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்த நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக, எப்போதும் இருக்கும் என இந்தியா கூறியது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் இரு நாடுகளும் போர் புரிவதில் விருப்பம் இல்லை என தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவையில் தீர்வு காண முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.