இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது...மனோ கணேசன் வெளியிட்ட தகவல்!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது...மனோ கணேசன் வெளியிட்ட தகவல்!

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கும் எனவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை   தெரிவித்தார். தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது வடக்கு-கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவேண்டும் என தான் தீபாவளி நிகழ்வின் பொழுது அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது வலியுறுத்தியதாகவும் அவர் இந்த ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.