கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த விமானம்!!

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த விமானம்!!

விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஏரியில் விழுந்த 15 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை, தான்சானியாவில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  ப்ரிசிஷன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானமானது புகோபாவில் தரையிறங்கவிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், விமானம் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏரியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தெரிய வந்ததும், மீட்பு பணியை நிர்வாகம் தொடங்கியது.  தற்போது உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது வரை ஏரியில் விழுந்த 15 பேரை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.