காபூலுக்குள் நுழைந்தது தலிபான் படை.. விமானங்களை தயார் நிலையில் நிறுத்த உத்தரவு

காபூலில் இருந்து அவசர அவசரமாக வெளியேறுபவர்களுக்காக 2 விமானங்களை அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காபூலுக்குள் நுழைந்தது தலிபான் படை.. விமானங்களை தயார் நிலையில் நிறுத்த உத்தரவு

ஆப்கானிஸ்தானின் அசாதாரண சூழல் நிலவுவதால் அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதையேற்று அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆப்கான் தலைநகர் காபூலையும் தாலிபான் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் அங்கு நிலையை மேலும் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்தியர்களின் வசதிக்காக காபூல் விமான நிலையத்தில் 2 விமானங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.