உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிரம்...!

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிரம்...!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற முழுவீச்சில் ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, “ரஷியா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளும் அதைச்செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருவதாகவும், ரஷ்யாவை பொருளாதார ரீதியில் இன்னும் பலவீனப்படுத்த கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.