ஹெலிகாப்டரில் "புல் அப்ஸ்" எடுத்து சாதனை படைத்த நபர்!!

ஹெலிகாப்டரில் "புல் அப்ஸ்" எடுத்து சாதனை படைத்த நபர்!!

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகவும். பலரின் கனவாகவும் இருக்கும்.. அந்த வகையில், பல விதமான சாதனைகளை படைத்து பல நபர்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த யூட்யூபர் ஸ்டான் ப்ரவுனி என்ற நபர் பறக்கும் ஹெலிகாப்டரில் புல் அப்ஸ் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஸ்டான் ப்ரவுனி என்ற நபர் யூட்யூபில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். வித்தியாசமான சாதனை செய்ய முற்பட்ட அவர், பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி, ஒரு நிமிடத்தில் 25 புல் அப்ஸ் எடுத்தார். இதனை அங்கீகரித்து கின்னஸ் சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்குமுன் ஒரு நிமிடத்தில் 23 புல் அப்ஸ் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.