அரசுமுறைப் பயணம்.. இந்தியா-நார்டிக் நாடுகள் 2வது மாநாட்டில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி

அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இரண்டாவது இந்தியா- நார்டிக் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

அரசுமுறைப் பயணம்.. இந்தியா-நார்டிக் நாடுகள் 2வது மாநாட்டில் பங்கேற்க உள்ளார் பிரதமர் மோடி

ஜெர்மனி சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டென்மார்க் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் விமானநிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு நாடுகளின் உயர்மட்ட அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா- நார்டிக் நாடுகளிடையே நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

டென்மார்க், ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய நார்டிக் கூட்டமைப்புடன் பசுமை  மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நார்டிக் நாடுகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பிரான்சு செல்லும் பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளார். இருதரப்பு உறவுகள், உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.