பாலியல் புகாருக்கு ஆளான ஆளுநர்... பதவி விலக ஜோ பைடன் வலியுறுத்தல்...

நியூயார்க் ஆளுநர் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ மீதான் பாலியல் புகார் நிரூபணமாகியுள்ளதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் புகாருக்கு ஆளான ஆளுநர்... பதவி விலக ஜோ பைடன் வலியுறுத்தல்...

அமெக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை குழு தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. அதில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 11 பெண்களுடன் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளதாக மாநில அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் தரப்பில் 165 பக்க குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன், நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.