தண்டவாளத்தில் இறங்கிய தாய்...எதிரே வந்த ரெயில்...திடீரென்று குதித்த மகன்...நூலிழையில் நடந்த சம்பவம்!

தண்டவாளத்தில் இறங்கிய தாய்...எதிரே வந்த ரெயில்...திடீரென்று குதித்த மகன்...நூலிழையில் நடந்த சம்பவம்!

பெங்களூரில் தண்டவாளத்தில் விழுந்த தாயை மகன் காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தண்டவாளத்தில் இறங்கிய தாய்:

பெங்களூர், கல்புருகி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. 

இதையும் படிக்க: விருகம்பாக்கம் உள்பட 5 இடங்களில் திடீர் சோதனை...அமலாக்கத்துறை சொல்லப்போகும் தகவல் என்ன?

நூலிழையில் உயிர் தப்பிய தாய், மகன்:

தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனித்த அந்த தாயின் மகன், உடனடியாக தாயை பிடித்துக்கொண்டு தண்டவாளத்தின் அருகே அமர்ந்து விட்டான். இதனால் தாயும் , மகனும் நூலிழையில் உயிர் தப்பினர். 

வைரலாகும் வீடியோ:

இதையடுத்து, தண்டவாளத்தில் விழுந்த தாயை மகன் காப்பாற்றிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.