தண்டவாளத்தில் இறங்கிய தாய்...எதிரே வந்த ரெயில்...திடீரென்று குதித்த மகன்...நூலிழையில் நடந்த சம்பவம்!
பெங்களூரில் தண்டவாளத்தில் விழுந்த தாயை மகன் காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தண்டவாளத்தில் இறங்கிய தாய்:
பெங்களூர், கல்புருகி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையும் படிக்க: விருகம்பாக்கம் உள்பட 5 இடங்களில் திடீர் சோதனை...அமலாக்கத்துறை சொல்லப்போகும் தகவல் என்ன?
நூலிழையில் உயிர் தப்பிய தாய், மகன்:
தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனித்த அந்த தாயின் மகன், உடனடியாக தாயை பிடித்துக்கொண்டு தண்டவாளத்தின் அருகே அமர்ந்து விட்டான். இதனால் தாயும் , மகனும் நூலிழையில் உயிர் தப்பினர்.
வைரலாகும் வீடியோ:
இதையடுத்து, தண்டவாளத்தில் விழுந்த தாயை மகன் காப்பாற்றிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.