காதலனை ரோட்டில் அசிங்கமாக திட்டி , அடிக்கும் காதலி...! பொளேர் என கன்னத்தில் அறைந்த டெலிவரி பாய்...! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாய் ஒருவர் நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலனை ரோட்டில் அசிங்கமாக திட்டி , அடிக்கும் காதலி...! பொளேர்  என கன்னத்தில் அறைந்த டெலிவரி பாய்...! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர்  நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல்  அவர் தனது காதலனை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், பொது இடத்தில் அவரை அடிப்பதுமாய் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் ஒரு கல்லை எடுத்து காதலன் மீது வேகமாக வீசுகிறாள். இச்சம்பவம் சாலையில் செல்லும் பொதுமக்களை கோவப்படுத்தியது என்றே சொல்லலாம். 

அந்தவகையில் இவர்கள் சண்டையை கவனித்துக்கொண்டு இருந்த டெலிவரி பாய் ஒருவர் காதலர்களுக்கு இடையே சமாதானம் செய்வதற்காக முயற்ச்சி செய்துள்ளார். ஆனால், வேறு ஒருவர் வந்து சமாதானம் செய்வதை ஒப்புக்கொள்ளாத அந்த பெண், உணவு விநியோகிக்கும் இளைஞரை திட்டத் தொடங்கினார். இதனால் பொறுமை இழந்த டெலிவரி பாய் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்கிடையில், அவர்களைச் சுற்றி திரண்ட மக்கள் சண்டையில் தலையிட்டு அவர்கள் இருவரையும் அமைதிப்படுத்த முயன்றனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டிசிபி உமாசங்கர் தாஷ் பேசியபோது, "இது இரு தரப்பினரும் தாக்கிய சம்பவம் என்பதால், அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளூர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளேன்" என கூறி உள்ளார்.