வானத்தை அலங்கரைத்த அரிய வகை வானவில்!!! வைரலாகும் போட்டொக்கள்!!!
இணையத்தில் தற்போது ஒரு அரிய வகை வானவில் புகைப்படங்களும் வீடியோக்களும் பலராலும் பகிரபட்டு வைரலாகி வருகிறது.
இயற்கையின் அழகு பேசியும் ரசித்தும் மாளாதது. ஒவ்வொரு முறையும், நம்மை ஆச்சிரியக்கடலில் ஆழ்த்தும் அளவிற்கு பல அதிசயங்கள் நிஅரிந்த இந்த இயற்கையின் ஒரு சில செயல்கள், நம் கண்களில் படும் போது, அதனை போட்டோவாகவோ, வீடியோவாகவோ எடுத்து, அனைவரிடமும் பகிர்ந்து மகிழ ஆசை படுவோம். அது தான் தற்போது நடந்துள்ளது.
மழையில் அதிகம் நம்மை கவர்வது வானவில் தான். அந்த வானவில் சாதாரணமாகவே அழகானது. அது இன்னும் வித்தியாசமாக, அரிய வகையில் மேலும் அழகாக தெரிந்தால், விட்டு விடுவோமா?
சீனாவின் ஹைனன் மாகாணத்தில் உள்ள ஹைகோ நகரத்தில், நாய்கொடை வடிவில், மிக அழகான வானவில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மிக அழகான போர்வை போல “pileus” எனப்படும் நாய்கொடை வடிவில் உள்ள வானவில், கனமழை காரணமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அழகான வானவில்லைப் பாருங்கள்.
Rainbow colored scarf cloud over Haikou city in China pic.twitter.com/ewKmQjsiIE
— Sunlit Rain (@Earthlings10m) August 26, 2022