டிஎஸ்பி பக்கத்து வீட்டுக்காரர்ருடன் சண்டை ...இடுப்புத்துண்டு கழண்டு விழுந்ததால் பரபரப்பு! 

டிஎஸ்பி ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர்ருடன் இடுப்புத்துண்டு கூட கழண்டு விழுவது தெரியாமல் சண்டை போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.  

டிஎஸ்பி பக்கத்து வீட்டுக்காரர்ருடன் சண்டை ...இடுப்புத்துண்டு கழண்டு விழுந்ததால் பரபரப்பு! 

மஹாராஷ்டிரா மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் டிஎஸ்பி வேதாந்த சர்மா.இவர் உஜ்ஜெயின் லோக் ஆயுக்தா வேதாந்தா டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார்.டிஎஸ்பி யின் பக்கத்து வீட்டில் சந்தீப் விஜ் என்னும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் வசித்து வந்திருக்கிறார். வங்கி அதிகாரியான சஞ்சீவ் விஜ் வீட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது. 

டிஎஸ்பி விலை உயர்ந்த BMW கார்  வைத்துள்ளார்.சந்தீப் வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் டிஎஸ்பி வீட்டில் உள்ள விலை உயர்ந்த கார் மீது தூசி படிந்து உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பக்கத்து வீட்டில் பணியாற்றும் கட்டுமான தொழிலாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர்  டிஎஸ்பி. இது குறித்து ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளார்.இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்  சந்தீப் சமாதானம் பேச முற்பட்டு அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். டிஎஸ்பி வீட்டு வாசல் முன்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வாக்குவாதம் முற்றி போய் சந்தீப் மீது தாக்க முயற்சி செய்துள்ளார்.  

இந்த சண்டையில் டிஎஸ்பி-யின் இடுப்புத்துண்டு அவிழ்ந்து விழ அந்த சமயம் பார்த்து சந்தீப் அங்கிருந்து ஓடிவிட்டார்.இந்த சண்டை காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி-யில் பதிவு ஆகி உள்ளது.தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.