மேலும் 3 மாவட்ட நிர்வாகிகள் இருந்து நீக்கம்... அதிமுக தலைமை நடவடிக்கை...

சசிகலாவிடம் பேசிய மேலும் 3 மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்

மேலும் 3 மாவட்ட நிர்வாகிகள் இருந்து நீக்கம்... அதிமுக தலைமை நடவடிக்கை...
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, சேலம், சிவகங்கை மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால், சேலம் மாவட்ட  மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட புரட்சி தலைவி பேரவை இணைச்செயலாளர் சரவணன், மகளிர் அணி இணை செயலாளர் சண்முக பிரியா மற்றும் திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி  இணை செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.