ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தியிருப்பது இந்திய சாதனை- முதல்வர் பெருமிதம்

25 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமைபட கூறியுள்ளார்.

ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தியிருப்பது இந்திய சாதனை- முதல்வர் பெருமிதம்

25 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமைபட கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக தமிழக அரசு நடத்தி வருகிறது என பதிவுட்டுள்ளார். நேற்றைய தினம் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,  இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை எனவும் பெருமைபட கூறியுள்ளார்.

 மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்,  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், இதன்மூலம், நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்  எனவும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.