அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? வலுக்கும் எதிர்ப்பு!

பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது.

அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? வலுக்கும் எதிர்ப்பு!

மாநகராட்சி ஆரம்பப்பள்ளி  வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காணொளி வெளியீடு

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது. இந்த நிலையில், ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் சாகா பயிற்சியில் ஈடுபட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்

இதைத் தொடர்ந்து மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய ராமகிருஷ்ணன்,ஆர் எஸ் எஸ். அமைப்பினர் ஆயுதங்களை ஏந்தி பயிற்சி மேற்கொள்வதற்கு மாநகராட்சி பள்ளியை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி ஆணையர் பிரதாப் ,இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.