ஆளுநர் மாளிகை கண்டன ஆர்ப்பாட்டம்...! பொதுகூட்டமாக மாற்றம்...! 

ஆளுநர் மாளிகை கண்டன ஆர்ப்பாட்டம்...! பொதுகூட்டமாக மாற்றம்...! 

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன பொதுகூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வருகிற ஏப்ரல் 12  அன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் மளிகை முன்பு நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை கண்டன பொதுக்கூட்டமாக மாற்றி அமைத்து  மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சரால் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி  ‘ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளார்.இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி" என தெரிவித்துள்ளனர். 

மேலும் "இன்னும் ஆளுநர் அவர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் - விளக்கமும் அளிக்காத காரணத்தினால் 12-4-2023 அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே நாளில் அன்று மாலை 5.00 மணியளவில்,  சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் ‘மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக' நடைபெறும் என தெரிவிக்கப்பற்றுள்ளது" என தெரிவித்துள்ளனர்.