மோடி-அமித் ஷா படங்களுடன் பதாகை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

மோடி-அமித் ஷா படங்களுடன் பதாகை வைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கோஷ்டியினர், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்துடன் பேனர் வைத்ததால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுகவின்  எம் ஜி ஆர் இளைஞர் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்த ஆர்.வி.ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதிய மாவட்ட செயலாளராக ஆர்வி.ரஞ்ஜித்குமாரை  அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  ஆர்.வி.ரஞ்சித் குமார் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அண்ணா, பெரியார்,எம்ஜிஆர், ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பிரசித்தி பெற்ற முத்தியால்பேட்டை  பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்தும்வழிபாடு நடத்தினார்.

மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பெரிய அளவில் இடம்பெற்று, ஓபிஎஸ் வணங்குவது போல பேனர்கள் வைக்கப்பட்டதால் காஞ்சிபுரம் பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பதாகைகளைப் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமோ என முனுமுனுத்தபடி பதாகையை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.