இனி 10 நாள் தான்,.அதன் பின் மின்வெட்டு பிரச்சனையே இருக்காது,.. மின்சார வாரியம் அதிரடி.! 

இனி 10 நாள் தான்,.அதன் பின் மின்வெட்டு பிரச்சனையே இருக்காது,.. மின்சார வாரியம் அதிரடி.! 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறினார். மேலும் சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மின் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த மின்வெட்டை தடுக்க 10 நாட்கள் தீவிர பராமரிப்பு பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ளவிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதன் காரணமாக சில நாட்களில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.