பைக்கில் வந்த சிறுவன் - நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தை வேகமாக திருப்பிய போது தவறி விழுந்த சிறுவன் பேருந்து ஓட்டுநனரால் நூலிழையில் உயிர்த்தப்பிய  சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் வந்த சிறுவன் - நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தை வேகமாக திருப்பிய போது தவறி விழுந்த சிறுவன் பேருந்து ஓட்டுநனரால் நூலிழையில் உயிர்த்தப்பிய  சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்த சிறுவன் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க காத்திருந்தார். பிரதான சாலை என்பதால் தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டே இருந்த போது வேகமாக சாலையை கடக்க முயன்ற சிறுவன்  நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சாதுர்த்தியமாக பேருந்தை நிறுத்தினார்.

ஓட்டுநரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கபட்டு சிறுவன் நூலிழையில் உயிர்தப்பினார். பதைபதைக்கும் இந்த நிகழ்வின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.