சென்னையில் பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி...

சென்னையில் பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி...

சென்னையில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதி இளைஞர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் இன்று நள்ளிரவு சரக்கு லாரி அண்ணா சிலை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலை வழியாக மருந்து வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த முகமது ஜூன்னாத் என்ற இளைஞர்  மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியது இதில் உடல் நசுங்கி முகமது ஜூன்னத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநர் தப்பி ஒடிவிட்டார்.அங்கிருந்த லாரியினை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மேலும் மைலாப்பூர் துணை ஆணையர் டிஷா மிட்டல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தில் கூட்டத்தை கலைத்து இந்த சம்பவம் குறித்து  சிந்தாதிரிபேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு  ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்...