”எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க...” ஆவேசமாக பேசிய அமைச்சர் பொன்முடி!!!

”எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க...” ஆவேசமாக பேசிய அமைச்சர் பொன்முடி!!!

விழுப்புரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, குறைகளை தெரிவித்த கிராம மக்களை கடுமையாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராமத்தில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி கிராம மக்களிடையே உரையாற்றினார்.  அப்போது இக்கிராமத்தில் சாலை , தெரு மின்விளக்கு, குடிநீர் வசதிகளை தாம் செய்து கொடுத்தாதாக தெரிவித்தார்.  அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக்கூறி கூச்சல் எழுப்பினர்.  அதனால் ஆவேசமடைந்த பொன்முடி, நீங்கள் எனக்கு வாக்கு செலுத்தவில்லை எனவும், அமைதியாக உட்காரும் படியும் கடுமையாக சாடினார்.  அமைச்சரின் பேச்சு அங்கிருந்தவர்களிடையே முகம் சுழிக்க வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசி பஸ்சில் பயணம் செய்வதாக கூறியிருந்தார்.  அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கிராம மக்கள் மீதான பொன்முடியின் ஆவேச பேச்சு அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:   முறைகேடான பத்திர பதிவு... தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்...!!!