பருத்தி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பு.. நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

திருப்பனந்தாள் பகுதியில், பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருத்தி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பு.. நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாள் பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, பருத்தி அதிக மகசூல் கிடைத்துள்ளது. அத்துடன், பருத்திக்கு கூடுதல் விலை கிடைப்பதால், பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலால், மகசூல் குறைந்து விட்டதால் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது, பூச்சி தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இதுபோன்ற மகசூல் இழப்பு ஏற்படாது என விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.