மகளிர் உரிமை தொகை; பெண்கள் கடும் அவதி ..!

மகளிர் உரிமை தொகை;  பெண்கள் கடும் அவதி ..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பகுதி பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது . இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை செலுத்தி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் .

குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாமல் இருந்து வருவதால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை மட்டுமே அவர்கள் நாடும் நிலை இருந்து வருகிறது . இவ்வாறாக வரும் நிலையில் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது .

மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும்  படிக்க   | ”உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்” - துரைமுருகன்