பாஜக பெண்களை இழிவாக பேசும் திமுகவினரை, இந்த அரசு ஏன் கைது செய்யவில்லை....அண்ணாமலை கேள்வி
பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டால் கைது செய்யும் தமிழக அரசு, பாஜக பெண்களை இழிவாக பேசும் திமுகவினரை ஏன் கைது செய்யவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளார்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
பாஜகவினரை கங்கணம் கட்டி கைது செய்யும் திமுக அரசு பாரதிய ஜனதா கட்சியின் பெண்களை அவதூறாக பேசும் திமுகவினரை மட்டும் கைது செய்யவில்லை என கூறினார்.
எனவே திமுகவினரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடன், வரும் நவம்பர் 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரத்தில் எந்த தனியார் நிறுவனங்களும் லாபம் பெற துணை நின்றதில்லை. பெட்ரோல் டீசல் வரி மூலமாக கிடைக்கும் தொகையை மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்காக செயல்படுத்தி வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தீபாவளி பண்டிகை என்பது பாரம்பரியமானது என்றும் எனவே அனைவரும் தைரியமாக பட்டாசு கொளுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.