குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறுவது எங்கே...?
குடியரசு தின நிகழ்ச்சிக்கான இடம் வரும் 5ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் மெரினா கடற்கரை காந்திசிலை முன்பாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைப்பெறும். ஆனால் மெட்ரோ பணிகள் காரணமாக இந்தாண்டு அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசு தின நிகழ்ச்சிகளை எங்கு நடத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | குடியரசு தின விழா அணிவகுப்பு...! தமிழக அலங்கார ஊர்தி தேர்வு... !
குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் காமராஜர் சாலையிலேயே வேறு இடத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம், மற்றும் உழைப்பாளர் சிலை முன்பாக என இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரண்டில் எந்த இடம் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் 5ம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. விவேகானந்தர் இல்லமே குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இல்லம் தேடி கல்வி திட்டம்...! தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம்...?