களைகட்டியது தீபாவளி பண்டிகை... மக்கள் உற்சாக கொண்டாட்டம்...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியது. பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

களைகட்டியது தீபாவளி பண்டிகை... மக்கள் உற்சாக கொண்டாட்டம்...

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை, இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்ட தொடங்கியது. பொதுமக்கள் அதிகாலையிலே எழுந்து நீராடி விட்டு, பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.  கோயில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். சென்னை போன்ற பெருநகரங்களில், மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் வழக்கமான அளவை விட குறைந்த அளவிலேயே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும், தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.